
கடைசியில் விஜய்யின் ஐம்பதாவது படத்தின் பெயர் சுறா என்று உறுதியாகவும், இறுதியாகவும் முடிவு செய்துவிட்டார்கள். இந்தப் படத்தில் மீனவராக வருகிறாராம் விஜய்.
படத்தின் ஒவ்வொரு பிரேமும் அழகாக, பிரமாண்டமாக வரவேண்டும் என்பது விஜய் தரப்பு கட்டளை. அதனால் அழகான கடற்கரையை தேடி கேரளா பக்கம் ஒதுங்குகிறார்கள். செப்டம்பர் 18ஆம் தேதி கேரளா செல்லும் யூனிட் அறுபது நாட்கள் கழித்தே சென்னை திரும்புகிறது.
தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், குறிப்பாக முட்டம் போன்ற பகுதிகள் ஏற்கனவே பலப் படங்களில் காட்டப்பட்டுவிட்டது. பிரெஷ்ஷான இடத்திற்காகதான் சுறா யூனிட் கேரளா செல்கிறது.
படத்துக்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஜோடியாக நடிப்பவர் தமன்னா. கதை, திரைக்கதை எழுதி எஸ்.பி.ராஜ்குமார் படத்தை இயக்குகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக