
செப்டம்பர் 18 ஆம் தேதி விஜய்யின் 50வது படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு உரிமைக்குரல் என்று வைத்திருந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது.
விஜய் நடித்துவரும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். படத்தை இயக்குகிறவர் ராஜ்குமார். இவர் சமீபத்தில் சங்கிலி முருகன் தயாரிப்பில் உருவான அழகர்மலை படத்தை இயக்கியவர்.
ஐம்பதாவது படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தமன்னாவுக்கு கிடைத்திருக்கிறது. படத்தில் வடிவேலும் இருக்கிறார். செப்டம்பர் 18 ஆம் தேதி படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
உரிமைக்குரல் என்ற பெயர் முதலில் பரிசீலனையில் இருந்தது. தற்போது படத்தின் பெயரை மாற்றியுள்ளனர். புதிய பெயர் சுறா. இந்தப் படத்தில் விஜய் மீனவ இளைஞனாக நடிப்பதால் இந்தப் பெயரை தேர்வு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக