| அரசியல் கட்சி துவங்குகிற விஷயத்தில் விஜய் நடத்துவது 'ஸ்லோ சைக்கிள் ரேஸ்' என்கிற அளவுக்கு சின்னதாக எடை போட்டுவிட்டது ஒரு முன்னணி பத்திரிகை. |
| அவ்வளவுதான்... பாய்ந்தடித்துக் கொண்டு விளக்கம் சொல்லியிருக்கிறார் இளையதளபதி. "நிச்சயம் அரசியலுக்கு வருவேன். அதற்கான பேஸ்மென்ட் வேலைகள் நடந்திட்டு இருக்கு" என்பதுதான் அவரது ஸ்டிராங்கான விளக்கம். (கனவை கலைச்சிடாதீங்க ரசிகருங்களா) அதற்கு முன் அவருக்கு சொல்லப்பட்டிருக்கும் ஒரு அட்வைஸ் ரொம்பவே மரியாதைக்குரியது! மக்கள் மன்றத்தில் பேசும்போதும், எழுதும்போதும், (உடன்பிறப்புக்கு கடிதமெல்லாம் எழுதுவாரோ) 'என் உயிரினும் மேலான தமிழ் மக்களே' என்ற வார்த்தையை பயன்படுத்த சொல்லியிருக்கிறாராம் அவரது அப்பா. இந்த வார்த்தை விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் கர்னல் பிரபாகரன் பயன்படுத்தி வந்த மந்திர வார்த்தை. இனிமேல் எங்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேர்ந்தாலும், இந்த வார்த்தை ஞாபகம் இருக்கட்டும். பெரும் போராளி ஒருவர் உபயோகப்படுத்திய இந்த வார்த்தைக்கே ஒரு ஈர்ப்பு உள்ளது என்றெல்லாம் லெக்சர் எடுத்தாராம் அப்பா. இதையடுத்து எல்லா மேடைகளிலும் இதை பயன்படுத்த துவங்கியிருக்கிறார் விஜய். |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக