முதல்கட்ட படப்பிடிப்பை கேரளாவில் முடித்துவிட்டு, இரண்டாம் கட்ட படிப்பிடிப்புக்காக பாண்டிச்சேரிக்கும், காரைக்காலுக்கும் இடைப்பட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்து படம் பிடித்து வருகிறது சுறா டீம்.
கதை மீனவர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் காரைக்காலில் ஒரு பிரம்மாண்டமான பெரிய மீனவக் குப்பத்தை உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இதற்காக மட்டும் சில கோடிகளை செலவு செய்துள்ளார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன்.
பதினைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மொத்த நடிக-நடிகைகளுக்கும் பாண்டிச்சேரியிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். ரியல் குப்பமாகவே இருக்க வேண்டும் என்பதற்காக தினம் ஐநூறுக்கும் மேற்பட்ட ஜூனியர் ஆட்டிஸ்டுகளுக்கு வேலை இருந்தபடியே இருக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக