Best Of IlayaThalapathy Vijay-Part 1

புதன், 28 அக்டோபர், 2009

விளம்பர படங்களில் நடிக்க விஜய் விருப்பம்!


சென்னை: ஒரு கதையை ஒரே நிமிடத்தில் அழகாக சொல்லும் விளம்பரப் படங்கள் பிரமிக்க வைக்கின்றன. அந்தப் படங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார் நடிகர் விஜய்.

கோகோ கோலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் நடிகர் விஜய்யை சந்திக்க வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், வெற்றியாளர்களுக்கு விஜய் பரிசு வழங்கினார். அத்துடன் இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 30 பேரின் குடும்பத்தினருடன் விஜய் ஜாலியாக கலந்துரையாடினார்.

தொடர்ந்து நடிகர் விஜய் பேசுகையில், "கோகோகோலா நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அதிகமாக ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவென்றால், ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரம் ஓடும். அதில் ஒரு கதையை சுவாரஸ்யமாக சொல்வார்கள்.

ஆனால் ஒரு பொருளின் புரமோஷனுக்கான விளம்பரம் என்பது ஒரு நிமிடம் மற்றும் 30 வினாடி மட்டுமே ஓடக் கூடியது. இதிலும் ஒரு கதை சொல்வார்கள்.

இவ்வாறு ஒரு நிமிடத்தில் சொல்லப்படும் கதைதான் எனக்கு பிரமிப்பை அளிக்கிறது. அப்போதே என் மனதில் இது போன்ற விளம்பர படங்களில் குறிப்பாக கோக் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். என்னுடைய ஆசை நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
விஜய்யின் 50வது படமான சுறா, மலையாளத்தில் மோகன்லால் நடித்த, "சோட்டா மும்பை' படக்கதையின் தழுவல் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது. ஆனால், படத்தின் இயக்குனரான எஸ்.பி.ராஜ்குமார், இதை மறுக்கிறார். "சுறா கதை, விஜய்க்கென்றே உருவாக்கப்பட்ட புதிய வடிவம்; அதனால், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்,..' என்கிறார்.

வியாழன், 22 அக்டோபர், 2009

மரக்காணத்தில் சுறா


விஜய் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான தீபாவளி. அவர்கள் எதிர்பார்த்த வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகவில்லை. அதே நேரம் அவர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றும் இருக்கிறது. அது சுறா.

விஜய்யின் ஐம்பதாவது படமான இதனை எஸ்.பி.ரா‌ஜ்குமார் இயக்கி வருகிறார். தமன்னா ஜோடி. கேரளாவில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. வேட்டைக்காரன் வெளியான மூன்று மாதத்திற்குள் சுறாவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

தற்போது சுறா யூனிட் மரக்காணத்தில் முகாமிட்டுள்ளது. இங்கு பிரமாண்ட அரங்குகள் அமைத்து ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை எடுக்க திட்டமிட்டுள்ளனர். எல்லா வகையிலும் சுறா பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக பணத்தை வா‌ரி இறைக்கிறார் தயா‌ரிப்பாளர் சங்கிலி முருகன்.

பாடல் காட்சிக்கு வெளிநாடு செல்லும் திட்டமும் இருக்கிறதாம்.

புதன், 21 அக்டோபர், 2009

மீண்டும் காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி?


இதுதான் இப்போது லேட்டஸ்ட் பரபரப்பு. விஜய்க்கு தொலைபேசியிலேயே கதை சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் பாசில். இந்த காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக பலமாகவே கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். விஜய் தனது ஐம்பதாவது படமான சுறாவில் தற்போது பிஸியாக இருக்கிறார். இதையடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த புராஜெக்ட் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சின்ன கேப்பில் சிக்சர் அடிக்க பலரும் முயற்சி செய்கிறார்கள்.

லிங்குசாமி விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளாராம். விஜய் ஓகே சொன்னால் படப்பிடிப்பை தொடங்க - பையாவுக்கு பிறகுதான் - அவர் தயார். ஏற்கனவே பாடிகாட் படத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.

இந்நிலையில் பாசிலும் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். விஜய்யின் சினிமா கே‌ரிய‌ரில் திருப்புமுனையாக அமைந்த படம், பாசிலின் காதலுக்கு ம‌ரியாதை. அதனால் கதையை கேட்ட விஜய் சீ‌ரியஸாக அதுபற்றி யோசனை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி மீண்டும் இணையுமா? விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்.

வியாழன், 15 அக்டோபர், 2009

பாசில் இயக்கத்தில்...


"வேட்டைக்காரன்' படத்தை முடித்து விட்ட விஜய், அடுத்து "சுறா' படத்தில் நடிக்கிறார். இதையடுத்து அவரது படங்களை ரமணா, "ஜெயம்' ராஜா, மலையாள இயக்குநர் சித்திக் ஆகியோர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்யுடன் நயன்தாரா ஜோடி சேரும் படத்தை பாசில் இயக்குவார் எனத் தெரிகிறது. ஏற்கனவே "காதலுக்கு மரியாதை', "கண்ணுக்குள் நிலவு' ஆகிய படங்களில் விஜய்யை பாசில் இயக்கிருக்கிறார். ஆனால், இந்த தகவல் விஜய் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது.

விஜய் கட்டப்போகும் பள்ளிக்கூடம்


நடிகர் விஜய் ஓசையுடனும் ஓசை இல்லாமலும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். கட்சி ஆரம்பிக்கப் போகிறார்... அப்படி இப்படி என்று இவரைப் பற்றி அடிக்கடி செய்திகள் கசிந்தவண்ணம் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறாராம். இப்போது இவர் ஏழைகளும் பயன்பெறும் விதத்தில் சென்னையை அடுத்த வேளச்சேரியில் பள்ளிக்கூடம் ஒன்று கட்டும் எண்ணத்தில் இருக்கிறாராம். இந்தப் பள்ளிக்கூடம் கம்ப்யூட்டர் வசதிகளைக் கொண்டு முன்னணி பள்ளிக்கூடங்களுக்கு இணையானதாக இருக்குமாம். இந்தப் பள்ளிக்கு மக்கள் நல்ல ஆதரவைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் விஜய்.

நல்ல விஷயங்களுக்கு எப்பவுமே நம்ம மக்கள் ஆதரவு தருவார்கள்.

செவ்வாய், 13 அக்டோபர், 2009

வேட்டைக்காரன் எப்ப ரிலிஸ்?


தீபாவளிக்கு வேட்டைக்காரன் வெளியாகவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தீபாவளி ரேஸில் கலந்து கொள்கின்றன. கடைசி நேரத்தில் சா பூ தி‌ரி, அதே நேரம் அதே இடம் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகவில்லை. ச‌ரி, அப்படியானால் எப்போதுதான் படம் வெளியாகும்? தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே பெ‌ரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் வெளியிட வேண்டும் என்ற தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதிமுறை இந்த தீபாவளி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த புதிய விதியின்படி பொங்கலுக்குதான் வேட்டைக்காரனை வெளியிட வேண்டும். அவ்வளவு நாள் படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் காத்துக் கொண்டிருக்குமா? அதற்கு முன்னால் அவர்கள் படத்தை வெளியிட துணிந்தால் என்ன செய்வது? இதுதான் இப்போது தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தை ஆட்டிப் படைக்கும் கேள்வி.

புதன், 7 அக்டோபர், 2009

விஜய், தமன்னாவை சூழ்ந்த ரசிகர்கள்


வேட்டைக்காரன் படப்பிடிப்பு வேலைகளை முற்றிலுமாக முடித்து கொடுத்துவிட்ட விஜய் தற்போது 50வது படமான சுறாவுக்காக கேரளாவில் பிசியாகி இருக்கிறார்.

இதில் விஜய்க்கு தமன்னா ஜோடி போட்டுள்ளார். காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

அழகர் மலை படத்தை இயக்கிய எஸ்பி ராஜ்குமார் விஜய்யின் 50வது படத்தை பிரமாண்டமான வெற்றி படமாக மாற்ற முயற்சித்து வருகிறார். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவே பெரும் சிரமப்பட்டு உழைத்து வருகிறது.

படப்பிடிப்பு குழுவினர் கடந்த ஒரு வார காலமாக கேரளா, ஆலப்புழையில் ரொமான்ஸ் சீன்களை எடுத்து வருகின்றனர். முதலில் ரொமான்ஸ், மத்ததெல்லாம் அடுத்து என்பதில் இயக்குனர் உறுதியாக இருக்கிறாராம். இதில் பல சீன்கள் நன்றாகவே வந்துள்ளதாம்.

இந்நிலையில் மீனவ இளைஞரான விஜய், தண்ணீரில் தத்தளிக்கும் தமன்னாவை காப்பாற்றுவது போன்ற காட்சிகள் கடற்கரை பகுதிகளில் எடுக்கப்பட்டதாம்.

அப்போது விஜய், தமன்னா வந்திருப்பதை தெரிந்து கொண்ட கேரள ரசிகர்கள் சுமார் ஆயிரம் பேர் மொத்தமாக வந்து ஷூட்டிங் ஸ்பாட்டையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனராம்.

விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய அவர்கள் அவருடன் போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என அடம் பிடித்துள்ளனர். அப்போது ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல மணி நேரம் ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படக்குழுவினர் வேறு வழி தெரியாமல் போலீஸாரை கூப்பிட்டு, கூட்டத்தை அப்புறப்படுத்தினார்களாம்.

விஜய்யின் புதிய வில்லன்


வில்லன் பவர்ஃபுல்லாக இருந்தால் மட்டுமே ஹீரோயிசம் தூக்கலாக‌த் தெ‌ரியும். எம்.‌ஜி.ஆ‌ரின் ஹீரோ இமேஜுக்கு மறைமுக காரணம் நம்பியா‌ரின் வில்லத்தனம் என்றால் மறுக்க முடியுமா? ஒரு படத்தின் வில்லனை முடிவு செய்தாலே பாதி வேலை முடிந்த மாதி‌ரி.

அந்தவகையில் சுறாவில் விஜய்யின் வில்லன் யார் என்பதை முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ரா‌ஜ்குமார்.

சமீபத்தில் ஆந்திராவை கலக்கிய படம், ராம் சரண் தேஜா நடித்த மஹாதீரா. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர், தேவ் கில். இவரை சுறாவில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இவரே சுறாவில் மெயின் வில்லன், விஜய்யுடன் மோதப் போகிறவர்.

கேரளாவின் ஆலப்புழையில் முதல் ஷெட்யூலை முடித்தவர்கள் இரண்டாவது ஷெட்யூலுக்காக சென்னை வந்துள்ளனர். பின்னி மில்லில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெறலாம் என்பது யூனிட்டிலிருந்து கசிந்திருக்கும் செய்தி.

வியாழன், 1 அக்டோபர், 2009

விஜய்யின் முதுகில் தமன்னா... அலுக்காத ரீடேக்!


கொச்சினில் நடந்து வருகிறது சுறா படப்பிடிப்பு. ஆனாலும் கமல்ஹாசனுக்கு விஜய் டிவி நடத்துகிற பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அங்கிருந்து பறந்து வந்தார் விஜய்.
நடிப்பில் ரஜினி வழியை பின்பற்றும் விஜய், அடிப்படையில் கமல் மேல் மிகவும் பற்று கொண்டவர். அதனால்தான் இவ்வளவு கடுமையான வேலைகளுக்கு இடையேயும் கொச்சினிலிருந்து சென்னைக்கு பறந்து வந்துவிட்டார்.

சரி, கொச்சின் எபிசோட் சொல்லும் குளுகுளு மேட்டர் என்ன?

இந்த படத்தை துவங்கும் முன்பாகவே தமன்னாவை தங்க பஸ்பம் போல காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்களாம். அதற்கு பொறுத்தமாகதான் காஸ்ட்யூம்களும் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. அடிக்கிற மழையிலே ஐஸ்கிரீமை விழுங்கிய மாதிரி, தமன்னாவை தண்ணியிலே போட்டு முங்கவும் முடிவெடுத்திருந்தாங்களாம். எல்லாவற்றுக்கும் சம்மதித்த தமன்னா, நாள் முழுவதும் கொச்சின் கடலில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

ஒரு காட்சியில் விஜய் தோளில் பாய்ந்து ஏறிக் கொள்வது போல நடிக்க வேண்டும். சுமார் பத்து முறையாவது அவர் விஜய் மீது பாய்ந்ததாக குறிப்பிடுகிறார்கள் யூனிட்டில். பெரிய ஹீரோக்களை பொறுத்தவரை ரீடேக் என்றால் லேசாக எரிச்சல் படவும் செய்வார்கள். ஆனால், இந்த முறை விஜயும் பொறுமையாக இருந்தாராம்.

பஞ்ச் டயலாக்கை ரசிக்கிற மனுஷருக்கு, பஞ்சு மூட்டைய சுமக்கறதுக்கு கசக்குமா என்ன?

vettaikaran

ஐம்பதாவது படமான சுறாவில் பிஸியாகிவிட்டார் விஜய். விஜய்யும், தமன்னாவும் இடம்பெறும் காட்சிகளை கேரளாவின் ஆலப்புழாவில் படமாக்கி வருகிறார் இயக்குனர் எஸ்.பி.ரா‌ஜ்குமார்.

தீபாவளிக்கு அவரது வேட்டைக்காரன் வெளியாகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

விஜய், அனுஷ்கா இடம்பெறும் பாடல் காட்சி மற்றும் சில டாக்கி போர்ஷன் இன்னும் படமாக்கப்பட உள்ளதாம். இதில் பாடல் காட்சியை ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். அனுஷ்கா சூர்யாவின் சிங்கம் படத்தில் பிஸியாக இருப்பதால் வேட்டைக்காரன் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.

இந்த சிக்கல் காரணமாக படம் தீபாவளிக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வேட்டைக்காரனை வாங்கியிருக்கும் சன் பிக்சர்ஸ் ஏற்கனவே கண்டேன் காதலை படத்தின் உ‌ரிமையையும் வாங்கியுள்ளது. தவிர தனுஷின் குட்டி படத்தை வாங்கவும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த காரணங்களால் வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளிவருமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Best Actress in 2009

Best Actor in 2009

best songs in 2009

Who is your favorite Dancer in Tamil cinema History?

Who is your favorite actor?

How is this Website?

What is your favorite Movie

Vote for your favorite Movie in 2008

Best Music Director in 2009

Poll

Vijay's Best OnScreen Pair
Thrisha
Asin
Shriya
Nayanthara
Genelia
  
pollcode.com free polls

Poll

vote for your favorite song
Puli urumuthu-Vettaikaran
Unal unal-ATM
Moza Molanu-Kuruvi
Dole Dole-Pokkiri
Va va en thalaiva-Sachien
  
pollcode.com free polls