விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் தாணு. சீமான்தான் இப்படத்தின் இயக்குனர். படத்தின் பெயர் கோபம். கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் கதையை இழைத்து இழைத்து செதுக்கிக் கொண்டிருக்கிறார் சீமான். தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் டீமையும் தான் நடிக்கும் அவுட்டோர் படப்பிடிப்புக்கு அழைத்துப் போய் ஓய்வு நேரத்தில் அவர்களுடன் அமர்ந்து கதையை மெருகேற்றி வருகிறார். வழக்கத்திற்கு மாறாக இப்போது வெனின்சுலாவுக்கே போய்விட்டார் சீமான். அட, இதென்ன ஹைடெக் கதையா இருக்கு என்று ஆச்சர்யப்படுகிறவர்களுக்கு... வேறொரு முக்கிய நிகழ்ச்சிக்காக இந்த நாட்டுக்கு போயிருந்தாராம். அப்படியே இன்னும் ஒருவாரம் தங்கியிருந்து வசனங்களை எழுதிவிட்டு திரும்பலாம் என்று முடிவெடுத்தாராம். திரும்பி வரும்போது 'கோபம்' கோபமாக வருவார் போலிருக்கிறது. |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக