Best Of IlayaThalapathy Vijay-Part 1

புதன், 31 மார்ச், 2010

உங்கள் இணையதளமுகவரியை எமது லிஸ்டில் சேர்க்க வேண்டுமா?
தொடர்புகளுக்கு-tamilsuperstarvijayfans@gmail.com
உங்கள் இணையத்தின் பெயர் மற்றும் உங்கள் இணையமுகவரியை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்!!

செவ்வாய், 30 மார்ச், 2010

யார் வலையிலும் சிக்காத சுறா நான்!-விஜய்

திருச்சி: யார் விரித்த வலையிலும் சிக்கிக் கொள்ள நான் ஒன்றும் புறா இல்லை, சுறா, என்றார் நடிகர் விஜய் .

திருச்சி மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கத்தின் கவுரவ தலைவர் பி.எஸ்.வீரா திருமணம் நேற்று திருச்சியில் தாஜ் திருமண ஹாலில் நடந்தது. நடிகர் விஜய் தலைமை தாங்கி வீரா திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதே மேடையில் 24 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஜய் இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் விஜய் முன்னிலையில் மாலை மாற்றி கொண்டனர். அப்போது அவர், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்பட 51 பொருட்களை திருமண சீர்வரிசை பொருட்களாக வழங்கினார். மணமக்கள் ஒவ்வொரு ஜோடியாக விஜய் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

திருமண விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

ஒரு படத்தில் நடித்து முடிக்க 6 மாதம் ஆகிறது. 6 மாதம் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். இந்த நிலையில் இது போன்று ரசிகர்களை சந்திக்கும் போது தான் எனக்கு உற்சாக டானிக் கிடைக்கிறது.

நானும் உங்களில் ஒருத்தன். உங்கள் குடும்ப பிரச்சினை தீர்ப்பதில் எனக்கு பங்கு உண்டு. சிறுவயதில் என் தங்கை இறந்து விட்டார். ஆனால் இப்போது 25 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன். இதை நான் மறக்க முடியாதது.

வலையில் சிக்க புறா இல்லை... நான் சுறா!

சுறா படத்தில் நான் பேசும் வசனத்தில், அமைதியாக போவதற்கு நான் ஒன்றும் புதிய ஆள் அல்ல. உன் வலையில் விழுவதற்கு புறா அல்ல. நான் சுறா என்பேன். அதுபோல நான் யார் வலையிலும் சிக்க மாட்டேன். தனித்து என் பயணத்தைத் தொடர்வேன். என்றும் உங்களில் ஒருவனாக இருப்பேன்" என்றார்.

விஜய் - இது நற்பணி நேரம்


சுறா முடிந்துவிட்டது. ஏப்ரல் 14 படம் திரைக்கு வருகிறது. 

ஒரு படம் முடிந்து அது திரைக்கு வரும் இடைவெளியில் ரசிகர்கள் சந்திப்பு, நற்பணி கோலாகலம் என விஜய் தமிழகத்தை வலம் வருவது வழக்கம். வேட்டைக்காரன் ‌ரிலீஸையொட்டி புதுக்கோட்டை, புதுச்சே‌ரி என டூர் அடித்தவர் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை சில இடங்களில் தொடங்கி வைத்தார்.

விஜய்யின் சுறா டூர் திருச்சியில் தொடங்கியது. நேற்று திருச்சி சென்ற விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகி வீராவின் திருமணத்தில் கலந்து கொண்டார். மேலும் அதே மேடையில் 24 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் அவர் நடத்தி வைத்தார். இந்த 24 பேருக்கும் விஜய் செலவில் சீர்வ‌ரிசை செய்யப்பட்டது.

பிறகு ரசிகர்களிடம் பேசியவர், படத்துக்காக பல மாதங்கள் கடுமையாக உழைக்கும் தனக்கு இப்படி ரசிகர்களை சந்திப்பதுதான் உற்சாக டானிக் என்றார். இந்த இலவச திருமண விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் கலந்து கொண்டார்.

திருச்சியில் தொடங்கிய விஜய்யின் நற்பணி டூர் சுறா ‌ரிலீஸுக்குப் பின்பும் தொடரவுள்ளது.

'உங்கள் படத்தை சன் டிவி வாங்கி வெளியிட வேண்டுமா? தமன்னாவுக்கு அட்வான்ஸ் கொடுங்க...

இதை நாம் சொல்லவில்லை. சுறா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் [^] கேஎஸ் ரவிக்குமார், நடிகர் [^] விஜய் மற்றும் சன் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் கூறியது.

எதற்காக இதைச் சொன்னார்கள்?

சுறா ஆடியோ வெளியீட்டு விழா சென்னை [^] லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடந்தது. விழாவில் வாழ்த்திப் பேசிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், "அது என்னமோ தெரியல... தமன்னா நடிக்கிற படங்களை மட்டும் முதல்ல வாங்கிக்கிறாங்க சன் டிவியில. சன் டிவி படம் வாங்கணும்னா முதல்ல தமன்னாவை ஒப்பந்தம் பண்ணனும் போலருக்கு" என்றார் போகிற போக்கில்.

அடுத்துப் பேசிய விஜய், "எனக்குக் கூட ஒரு டவுட்... தமன்னா சன்டிவிக்கு சொந்தக் காரங்களோன்னு... அவங்க படம் எல்லாம் சன்டிவி வாங்கியிருக்கு. இனி முதல்லயே தமன்னாவுக்கு அட்வான்ஸ் கொடுத்திடலாம்..." என்றார்.

பின்னர் இறுதியாகப் பேசிய சன் டிவியின் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவும், "தமன்னா இன்று முன்னணி நடிகைகளுள் ஒருவர். தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறார். தமன்னாவுக்கு முதலில் அட்வான்ஸ் கொடுங்கள்... சன் டிவி படத்தை வாங்கிக் கொள்ளும்" என்றார்.




ஞாயிறு, 28 மார்ச், 2010

Vijay’s Sura- Big audio launch!

Sun Pictures and Ilayathalapathy Vijay is going to have a big bash audio launch of their Sura on Monday (March 29) evening at Lady Andal auditorium on Harrington Road in Chennai.

Vijay wants to make it a memorable evening as Sura is his 50th Golden Jubilee film which has music by his favourite Mani Sharma. The star has called all his heroines who have worked with him for this unique function.

Vijay and his Sura heroine Tamannaah are expected to be back in Chennai from Christchurch in New Zealand on Sunday morning where they had gone to shoot for the last song in the film.

சனி, 27 மார்ச், 2010

ஏப்ர‌லில் விஜய் படம் தொடக்கம்



எக்ஸ்பிரஸ் வேகத்தில் வேலை செய்கிறார் சித்திக். விஜய்யை வைத்து இயக்கும் பாடிகார்ட் படத்தின் தமிழ் ‌ரீமேக்கிற்காகதான் இந்த எக்ஸ்ட்ரா வேகம்.

விஜய் ஜோடி அசின், இசை வித்யாசாகர், மூன்று பாடல்கள் யுகபாரதி, பா.விஜய், விவேகா இருவருக்கும் தலா ஒரு பாடல், அசின் தந்தையாக ரா‌ஜ்கிரண், காமெடிக்கு வடிவேலு, எம்.எஸ்.பாஸ்கர், ஒளிப்பதிவு ஏகாம்பரம்... ஏறக்குறைய படத்தின் எல்லா அம்சங்களும் முடிவாகிவிட்டது. விஜய்யின் மாஸ் இமேஜுக்கு ஏற்றபடி காட்சிகளும் மாற்றப்பட்டுவிட்டன.

அனைத்தும் தயாரான நிலையில் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அனேகமாக ஏப்ரல் 1ஆ‌ம் தேதியே பட வேலைகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

விஜய், சிம்ரன் நடித்த ப்‌ரியமானவளே படத்தை தயா‌ரித்தவர்கள் இந்த ‌ீமேக்கை தயா‌ரிக்கின்றனர்.

Sura’ Complete. Vijay on tour


The shooting for Vijay’s 50th film ‘Sura’ is complete and film is on the very final editing table. After the release of ‘Sura’ Vijay will take up the ‘Bodyguard’ remake.
But before immersing himself fully with ‘Bodyguard’ Vijay will meet his fans and participate in some social work activities. Vijay did the same thing after the release of ‘Vettaikkaran’
This time Vijay is going to Trichy on March 28 and will conduct the marriages of 24 poor couples bearing all expenses. He will also inaugurate Free Computer Training Centers for the poor. The mass wedding in Trichy will by presided over by state ministers KN Nehru and Selvaraj.

24 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தும் விஜய்!

சுறா படம் முடிந்துவிட்டது. மீண்டும் தனது மக்கள் நலப் பணிகளை ஆரம்பித்திருக்கிறார் விஜய் [^]திருச்சி [^]யில் வரும் 28ம் தேதி 24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார்.

தனது மக்கள் நல மன்றத்தின் மூலம் தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை மாவட்டம் தோறும் செய்து வருகிறார் நடிகர் விஜய்.

ஒவ்வொரு படம் முடிந்து அடுத்த படம் துவங்குவதற்குள் இந்தப் பணிகளை செய்து முடிப்பது அவரது திட்டம்.

முன்பு வேட்டைக்காரன் ரிலீசுக்கு முன் புதுக்கோட்டை, புதுச்சேரி போன்ற பகுதிகளில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறந்து வைத்தார். பலருக்கு நல உதவிகள் மற்றும் பண உதவிகளையும் செய்தார்.

இப்போது அவரது 50வது படமான சுறா முடிந்து ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாகிறது.

இந்நிலையில் வரும் மார்ச் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருச்சிக்கு வருகிறார் விஜய். அப்போது இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் திறந்து வைக்கிறார்.

24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடக்கும்.

புதுமணத் தம்பதிகளுக்கு தனது செலவில் சீர் வரிசைகளும் வழங்குகிறார். அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் திருமண சான்றிதழ்கள் வழங்குகிறார்.

திருமண விழாவிற்கு அமைச்சர் கே.என். நேரு, தலைமை தாங்குகிறார். அமைச்சர் செல்வராஜ், முன்னிலை வகிக்கிறார். மேயர் சுஜாதா, துணைமேயர் அன்பழகன், சிவா எம்.பி. அன்பில் பெரியசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.

விழா ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட விஜய் நற்பணிமன்ற தலைவர் ராஜா தலைமையில் ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

வியாழன், 25 மார்ச், 2010

மீண்டும் வடிவேலு


விஜய், அசின் இணைந்து நடிக்கவிருக்கும் மலையாள பாடிகார்ட்
நடிகர்-விஜய்
நடிகை-அசின்
காமெடி- வடிவேலு
இயக்குனர்-சித்திக் 
இசையமைப்பாளர்-வித்யாசாகர்

மேலும் தகவல்கள் மிக விரைவில் உங்கள்
 tamilsuperstarvijjay.blogspot.com இல் 

சுறாவையும் சிங்கத்தையும் மோதவிடும் சன்


விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தை பெரிய எதிர்பார்ப்போடு வாங்கியது சன் பிக்சர்ஸ். வாங்கிய படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்யாமல் இழுத்தடித்துக்கொண்டே போனது சன்.
பரத் நடித்த கண்டேன் காதலை படத்தை ரிலீஸ் செய்து அது வசூலில் நொண்டியடிக்க ஆரம்பித்ததும்தான் வேட்டைக்காரனை ரிலீஸ் செய்தது.
இந்த நீ…….ண்ட இடைவெளி படுத்திவிட்டது விஜய்யை. படம் ரிலீசானதும் ஏகமாய் எதிர்பார்த்த சன்னுக்கு ஏமாற்றம். இதனால் அடுத்த படத்தையும் சன்னுக்கே தருவதென உறுதியளித்துவிட்டார் விஜய்.
அதன்படி போட்ட ஒப்பந்தப்படி விஜய் நடித்த சுறாவை மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தது சன்.
ஆறு, வேல் கமர்ஷியல் ஹிட் படங்களுக்கு பிறகு ஹரி-சூர்யா இணைந்திருக்கும் சிங்கம் படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பதால் அந்த படத்தையும் வாங்கிவிட்டது சன். ஏப்ரல்-14க்கு சிங்கம். மே மாதம் சுறா என்று வகுத்து வைத்திருந்தது திட்டம்.
இதற்கிடையே விஜய், தனது 50வது படம் சுறா’வை ஏப்ரல்-14ல் ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பியிருக்கிறார்.
விஜய் விருப்பத்தை கேட்டதும் முதலில் சன் தரப்பு யோசித்திருக்கிறது. பின்பு, ஜெயம் ரவி நடிக்கும் தில்லாலங்கடி படம் வேறு இருக்கிறது. அதை மே மாதத்திற்கு வைத்துக்கொள்வோம் என்று சமாதானம் கொண்ட சன், அதிரடி முடிவு எடுத்திருக்கிறது.
அந்த அதிரடி…..சுறாவும்- சிங்கமும் ஒரே நாளில் ரிலீஸ்.

செவ்வாய், 23 மார்ச், 2010

Vijay to start Siddique film on April 1!


Ilayathalapathy Vijay will start the first schedule of director Siddique’sBodyguard remake in Chennai from Thursday, April 1.
The only common factor between the Malayalam and Tamil version is writer and director Siddique, who has made some minor changes in the Tamil version to suit Vijay’s image.
Vijay will play the role done by Dileep while Asin is going to do Nayanthara’s role in the Malayalam original.
Thyagarajan who had a pivotal role has been replaced by Raj Kiran in the Tamil version.
National award winning music director Ouseappachan’s replacement for the Tamil version is Vidyasagar. S Kumar who was the cameraman in the Malayalam version has been replaced by ace cameraman and Vijay’s current favourite Ekambaram, who has also done the actor’s Sura.
Vadivelu gives Vijay company in the comedy dapartment along with MS Bhaskar.

விஜய் படத்தில் ரா‌ஜ்கிரண்

விஜய் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். ஆனாலும் ரா‌ஜ்கிரணுடன் இணைந்து நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

விஜய்யின் 51வது படத்தை சித்திக் இயக்குகிறார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. வித்யாசாகர் இசையில் மூன்று பாடல்கள் கம்போஸாகிவிட்டன. இந்த மூன்று பாடல்களுக்கும் வ‌ரிகள் எழுதியவர் யுகபாரதி.

சித்திக்கின் சமீபத்திய மலையாளப் படம் பாடிகா‌ர்ட். திலீப், நயன்தாரா நடித்த இந்தப் படத்தின் கதையை விஜய்க்காக சிறிது மாற்றியிருக்கிறார் சித்திக். நயன்தாராவின் வேடத்தில் நடிப்பவர் அசின். அசினின் தந்தையாக நடிக்க ரா‌ஜ்கிரணை தேர்வு செய்துள்ளனர். விஜய், ரா‌ஜ்கிரண் இணைவது இதுவே முதல் முறை.

சுறாவைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏகம்பரமே ஒளிப்பதிவு செய்கிறார்.

Rajkiran to act with Vijay

An Actor-Producer, Rajkiran has acted in more than 150 moviesin Tamil and Telugu. He was best known for his performances in Pandavar Bhoomi andThavamai Thavamirundhu.

Now the actor will do the character of Vijay’s father in the remake of Bodyguard film in Tamil ,says the source. Veteran Malayalam director Siddique movie in Malayalam titled Bodyguard was a smash hit and the film earned positive reviews..  The movie starred Dillep and Nayanthara in lead.

Asin will be paired with the actor while comedy will be handled by Vadivelu. Camera will be handled byEkambaram while music will be scored byVidyasagar.

Suraa Stills





திங்கள், 22 மார்ச், 2010








மார்ச் 26 முதல் சுறா பாட்டு

விஜய்யின் 50வது படம் என்ற கெத்துடன் காஸ்ட்லியாகவே தயாராகியிருக்கிறது சுறா. சங்கிலி முருகன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

வேட்டைக்காரன் படம் முடிந்தும் வெளியிடாமல் இழுத்தடித்த சன் பிக்சர்ஸ், சுறவிஷயத்தில் காட்டுவது ஜெட் வேகம். தீபாவளிக்குப் பார்த்தால் போதும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் சன் பிக்சர்ஸ் முடுக்கிவிட்ட வேகத்தில் அடுத்த மாதமே படம் திரைக்கு வருகிறது.

முன்னோட்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை விம‌ரிசையாகக் கொண்டாட இருக்கிறார்கள். இதற்காக தேர்வு செய்திருக்கும் தேதி மார்ச் 26. அன்று சுறாவின் பாடல்களை வெளியிடுகிறார்கள். 

மணிசர்மா சுறாவுக்கு இசையமைத்திருக்கிறார். இவரும் விஜய்யும் இணைந்து பணியாற்றிய அனைத்துப் படங்களின் பாடல்களும் சூப்பர்ஹிட் என்பதால் சுறபாடல்களும் நிச்சயம் ஹிட்டாகும் என்பதில் விஜய்யின் எதி‌ரிகளுக்கே நல்ல நம்பிக்கை இருக்கிறது.

விஜய் ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடித்துள்ளார்.

ஞாயிறு, 21 மார்ச், 2010

மார்ச் 26-ல் சுறா இசை வெளியீடு

விஜய்யின் 50 வது படம் சுறா இசை வெளியீடு வரும் மார்ச் 26-ம் தேதி நடக்கிறது.

மிகச் சரியாக திட்டமிடப்பட்டு, விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது சங்கிலி முருகனின் தயாரிப்பான சுறா. விஜய்யுடன் இவர் இணைவது இரண்டாவது முறை. முதல் படம் காதலுத்து மரியாதை.

இந்தப் படம் விஜய்யின் திரையுலக வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும் என்கிறார் சங்கிலிமுருகன்.

இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது. விஜய் - தமன்னா பாடல் காட்சியை நியூஸிலாந்தில் படமாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார். இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்புகிறது படப்பிடிப்புக் குழு. அடுத்த நாளே இசை வெளியீட்டு விழாவுக்கு தேதி குறித்துள்ளனர்.

இதற்கிடையே படத்தின் ஆடியோ ரிலீஸூக்கு இப்போதே தேதி குறித்துவிட்டனர்.

மார்ச் 26-ம் தேதி சத்யம் வளாகத்தில் சுறா ஆடியோ ரிலீஸ் நடக்கிறது.


சனி, 20 மார்ச், 2010

Suraa Stills











Vijay,Jiiva in 3 Idiots?

Rajkumar Hirani’s 3 Idiots, starring Aamir Khan, Madhavan, Sharman Joshi and Kareena Kapoor, was a mega blockbuster.

The film has also become the highest grossing Hindi film in Tamil Nadu where it has managed to get a whooping collection in its very first week. As we know that a leading production house has bought the south Indian remake rights, the big question in Kollywood circle is who would be doing the lead roles.

Sources say, if all goes well Illayathalapathy Vijaywho has expressed his desire to work in the film will play Aamir khan’s role Rancho. As the story focuses on the education system in India, the actor feels the film will work big time in Kollywood.

Noted cameraman Ratnavelu has been approached to handle the camera for the film, which is likely to have music by Vijay Antony. Actor Jiiva is also being considered to play the role of Raju, played by Sharman Joshi. While the search is on for choosing the lead for Farhan’s role, which was played brilliantly by Madhavan in the original.

Let's wait and watch what we have in store for us!

vijay &Tamannaah off to New Zealand!


layathalapathy Vijay and his heroine Tamannaah were to shoot a song for Sura in New York and its surrounding areas.
Now the latest we hear is that at the last minute there has been a change and the location has been changed from New York to New Zealand countryside!
The change has come because of lack of time as producer Sangili Murugan has to submit the final copy of the film to Sun Pictures before March 30. The Sun team will watch the movie and suggest the necessary changes to make it a super hit.
The promotions for the movie have to start in April first week, if it has to release during the second half of the month. As of now Sura is likely to release by April 23 or 30, as Vijay’s Golden Jubilee film.
The Sura unit has left for New Zealand on Friday (March 19) night for New Zealand to shoot the song tuned by Mani Sharma and is said to be a peppy melody. Vijay and the team has to come back to Chennai in six days as the audio launch of the film is slated for March 26.

எந்திரனுடன் மோதத் தயாராகும் 'பாடிகார்ட்' விஜய்

விஜய் அளவுக்கு கோலிவுட்ல வேகமாக செயல்படும் மாஸ் ஹீரோ யாரும் இல்லை என்பது மீண்டும் நிரூபனமாகியிருக்கிறது. விஜயின் 50-வது படமான சுறா படத்தின்  இங்கு அழுத்தவும்) இறுதி கட்ட படப்பிடிப்பு ஒரு பக்கமும், போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் ஒருபக்கம் மும்முரமாக நடந்துகொண்டிருக்க இவரது 51-வது படத்தை இயக்கபோவது யார் என்ற மீடியாவின் கவலைக்கு ஜெயம்ராஜா, வெங்கட்பிரபு, சீமான், லிங்குசாமி, போன்ற இயக்குனர்களின் பெயர்கள் தீனியாக அமைந்தன.

ஆனால் இவர்களில் யாருமே இல்லை...முன்பு விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஃபிரெண்ட்ஸ் படத்தின் இயக்குனர் மலையாள சித்திக் என்பதை திட்டவட்டமாக முடிவுசெய்து விட்டார் விஜய். மேலும் தனது 51-வது படத்துக்கான இசையமைப்பை இப்போதே முடித்துவிட்டார்.

இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால்... பத்ரி, மதுர, கில்லி போன்ற விஜயின் சூப்பர்ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். “எனது 51-வது படத்துக்கும் அவர்தான் இசையமைக்க வேண்டும்” என இயக்குனர் சித்திக்கிடம் பிடிவாதமாகச்சொல்லி, ஆறு டூயூன்களை அதிரடியாக கம்போஸ் செய்ய வைத்து, அந்த டூயூன்களுக்கு யுகபாரதியை பாடல்கள் எழுதவைத்து ரெக்கார்டிங் வரை வந்துவிட்டார் என்றால் விஜயின் வேகத்தை பாருங்கள்.
சித்திக் மலையாளத்தில் இயக்கி அங்கே மிகப்பெரிய ஃபாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்ற படம் ‘பாடிகார்ட்’. அதைத்தான் விஜயின் 51-வது படமாக ரீமேக் செய்கிறார் சித்திக். கதாநாயகி அசின் என்பது முடிவாகிவிட்டது. ஜூன் 10-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்களாம். படத்தை இந்த ஆண்டின் தீபாவளிப் பண்டிக்கைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுத்தான் இத்தனைவேகத்தைக் காட்டுகிறார் விஜய் என்கிறார்கள் சித்திக் வட்டாரத்தில். ஏன்? தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கும் எந்திரனோடு மோதியே ஆகவேண்டும் என்பது விஜயின் தந்தை எஸ்.ஏ.சியின் அதிரடி உத்தரவாம்.

விஜயின் வளர்ச்சியை பொறுக்காத ரஜினி... அஜித் விவகாரத்தில் ஒருதலைப் பட்சமாக அவரை சப்போர்ட் செய்தது, மகள் நிச்சயதார்த்த்த்துக்கு அழைப்பிதழ் அனுப்பாமல் அவமானப்படுத்தியது என்று ரஜினியின் மூவ் ஒவ்வொன்றும் தங்களுக்கு எதிராக இருப்பதாக விஜய் தரப்பு கருதுவாதால்தான் தொழில் ரீதியான அதிரடி மோதல் போக்கை ரஜினி விவகாரத்தில் கடைபிடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

அப்படியானால் சுறாவை எப்போது ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்? அதிலும் விவகாரம்தான். ஏப்ரல் 14-ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று அதிரடியாக ரிலீஸ் செய்கிறது சன் பிக்ஸர்ஸ். அதே தேதியில் சூரியாவின் சிங்கம் படத்தை ரிலிஸ் செய்ய திட்டமிட்ட தயாரிப்பாளர் இப்போது சுறாவுடன் சிங்கத்தை மோத விடுவதா...வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம். திரைக்கதையை விட பரபரப்ப்பா இருக்குப்பா கோடாம்பாக்க உள்குத்து அரசியல்

ஏப்ரல் 14 சுறா?


விஜய்யின் சுறா படத்தை திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட தீர்மானித்திருக்கிறது சன் பிக்சர்ஸ். அனேகமாக படம் ஏப்ரலில் திரைக்கு வரலாம் என்கிறார்கள்.

வேட்டைக்காரன் படத்துக்குப் பிறகு விஜய் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது சுறா.விஜய்யின் 50வது படம் என்பதால் எக்ஸ்ட்ரா கவனம் எடுத்து படத்தை செதுக்கியிருக்கிறார்கள். படத்தை இயக்கியிருப்பவர் ராஜகுமார், அழகர்மலை படத்தை இயக்கியவர்.

வடிவேலு, தமன்னா என்று வெயிட்டான நட்சத்திரங்களுடன் தயாராகியிருக்கும் சுறாவின் சில பகுதிகளை மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படத்தை தழுவி எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் மெயின் கதை வேறு. மீனவர்க‌ள், கடல் என்று விஜய் இதுவரை புழங்காத ஏ‌ரியா.

தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் அடுத்த மாதமே திரைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள் உற்சாகமாக. படத்தை வாங்கியிருக்கும் சன் பிக்சர்ஸ் காட்டும் ஆர்வமும், அவசரமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். ஏப்ரல் 14 படத்தை திரையில் பார்க்கலாம் என்கிறது விஜய் தரப்பு.

ரசிகர்களுக்கு தீபாவளி ஏப்ரலிலேயே வருவது நல்லதுதானே.

வெள்ளி, 19 மார்ச், 2010

Vijay&Tamanna




விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – தமன்னா பேட்டி


தமன்னா... இன்றைய தேதியில் தமிழின் நெ.ஒன் நடிகை. இதைச் சொன்னால் அப்படியா என்று அப்பாவியாக முகம் மலர்கிறது. தனுஷ், சூர்யா, பரத், கார்த்தி, ஜெயம் ரவி இப்போது விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் வதந்தி, அதிகமாக சம்பளம் கேட்கிறார். புகழ்ச்சிக்கு மட்டுமல்ல இந்த புறணிக்கும் பொறுமையாகவே பதில் வருகிறது தமன்னாவிடமிருந்து.

கே.வி.ஆனந்தின் கோ படத்தில் முதலில் ஒப்பந்தமான நீங்கள் அந்தப் படத்திலிருந்து விலகியதற்கு அதிக சம்பளம் கேட்டதே காரணம் என்கிறார்களே, இது உண்மையா?

படத்தின் கதை, இயக்குனர், தயா‌ரிப்பு நிறுவனம், உடன் நடிக்கும் நடிகர் இவையெல்லாவற்றையும் வைத்துதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். சம்பளத்தைப் பொறுத்தவரை எனக்கு தகுதியான சம்பளத்தையே கேட்கிறேன், தயா‌ரிப்பாளர்களும் தருகிறார்கள். ஒரு படத்துக்கு கொடுக்கும் கால்ஷீட்டைப் பொறுத்தே சம்பளம் வாங்குகிறேன். அதனால் அதிக சம்பளம் கேட்கிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சக நடிகைகளுடன் உங்களுக்கு தகராறு என்று வரும் செய்திகள்...?

பையா படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஏதோ சில காரணங்களால் அவர் அதில் நடிக்கவில்லை, நான் நடித்தேன். நான் நடிக்காவிட்டாலும் வேறு யாராவது நடித்திருப்பார்கள். இதை வைத்து எனக்கும் நயன்தாராவுக்கும் லடாய் என்று எழுதினார்கள். மீடியாக்கள் அப்படி எழுதியதே தவிர எனக்கும் அவருக்கும் நடுவில் எந்த‌ச் சண்டையும் இல்லை.

WD
இப்போது நடித்துவரும் படங்கள்?

ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி என்ற படத்தில் நடிக்கிறேன். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக் படத்தின் ‌ீமேக்தான் இது. ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியை புதுமையாக எடுத்திருக்கிறார்கள். ஷோபி மாஸ்ட‌ரின் கோ‌ரியோகிராஃபியில் நானே என்னுடைய நடனத்தை புதிதாக உணர்ந்தேன்.

இதுதவிர விஜய்யுடன் சுறாவில் நடித்து வருகிறேன். விஜய் எனக்குப் பிடித்த நடிகர். சின்சியர் வொர்க்கர். அவருடைய காம்பினேஷனில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுறாவில் உங்களுக்கு என்ன மாதி‌ரியான வேடம்?

சிட்டி கேர்ள். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். படம் பார்த்து தெ‌‌ரிந்து கொள்ளுங்கள்.

கல்லூரி வரை நீங்கள் கவனிக்கப்படாத நடிகை. இப்போது தமிழின் முதல்வ‌ரிசை நடிகைகளில் ஒருவர். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?

உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். இப்படியொரு இடத்துக்கு வருவேன் என்று நான் நினைக்கவில்லை. அதேநேரம் இந்த இடம்தான் என்னுடைய லட்சியமாக இருந்தது. என் லட்சித்துக்கு படிக்காதவனும், அயனும் ரொம்பவே உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பையா படத்திற்காக கார் ஓட்ட கற்றுக் கொண்டீர்களாமே?

எனக்கு கார் ஓட்ட தெ‌ரியும். பையாவுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய கே‌ரிய‌ரில் பையா முக்கியமான படமாக இருக்கும்.

நாலு படம் நடித்ததும் இந்திப் பக்கம் ஒதுங்குவதுதான் இப்போது பேஷன். நீங்கள் எப்படி?

தமிழில் எனக்கு என்று ஒரு இடம் இப்போது இருக்கிறது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இந்தியில் நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஒருவேளை வாய்ப்பு வந்தால்...?

கதை நன்றாக இருந்தால், யோசிக்கவே மாட்டேன், கண்டிப்பாக நடிப்பேன்.

விஜய்-சூர்யா நேரடி மோதல்

மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த சுறா, நாலு காய் பாய்ச்சலில் முன்பாகவே வரப்போகிறது. இப்படத்தை ஏப்ரல் 14 ந் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சன்.
இப்படி அஸ்திரத்தை ஏவுவார்கள் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம் சிங்கம்.
 
சாண் ஏறினால் சாண் சறுக்குகிற நிலையில்தான் இருந்தார் விஜய். சமீபத்தில் வெளிவந்த அவரது படங்கள் இழுத்துக்கோ பறிச்சிக்கோ நிலையில்தான் வசூலை சந்தித்தது. இனிமேல் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அதிரடியாக இருக்கணும் என்று முடிவெடுத்த விஜய், சுறாவின் றெக்கையை சாணை பிடித்துதான் வைத்திருக்கிறாராம். படத்தின் அத்தனை காட்சிகளும் செம ஷார்ப், பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கியாரண்டி என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

தனிக்காட்டு உறுமலாக இருக்கும் என்று நேற்றுவரை நம்பிக் கொண்டிருந்த சிங்கம் டீமை இந்த அரசல் புரசலான செய்தி அம்பு போல் தாக்கியிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

புதன், 17 மார்ச், 2010

3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய் யுடன் உதயநிதி

3 இடியட்ஸ் படத்தை விஜய் ரீமேக் செய்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்தப் படத்தை வசூல்ராஜா, குட்டி போன்ற படங்களைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கிறது.

அமீர்கான் வேடத்தில் விஜய் நடிக்கிறார். மாதவன் நடித்த பாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பார் எனத் தெரிகிறது. மூன்றாவது நாயகனாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று தெரிகிறது. படம் குறித்த விவாதம் நடந்து வருவதாகவும், இன்னும் சில தினங்களில் இறுதி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் இப்போது சுறா படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு மலையாள பாடிகார்டு படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். சித்திக் இயக்குகிறார். அதந் பிறகு ஜெயம் ராஜா படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது 3 இடியட்ஸ் ரீமேக் வந்திருப்பதால் எந்தப் படத்தை முதலில் துவங்குவார் என்று தெரியவில்லை.

கமல் மகள் ஸ்ருதி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

விஜய்யின் கைவசம் உள்ள, சுறா உள்ளிட்ட 4 படங்களுமே ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது!

திங்கள், 15 மார்ச், 2010

விஜய்யின் பகலவன்


மே மாதம் நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக ப‌ரிமாணம் கொள்கிறது. அரசியல் பிரவேசத்தையொட்டி சீமான் பரபரப்பாக இருப்பார் என்று பார்த்தால், ‌ரிலாக்சாக அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தார். படத்தின் ஹீரோ விஜய்.

தாணு தயா‌ரிப்பில் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தின் ஒன் லைன் சொல்லி விஜய்யின் சம்மதத்தையும் வாங்கிவிட்டார் சீமான். ஜெயம் ராஜா, சித்திக் இயக்கும் படங்களுக்குப் பிறகு பகலவன் படப்பிடிப்பில கலந்து கொள்கிறார் விஜய்.

ஏப்ரல், மே மாதங்களில் அரசியல் பணிகள் இருக்கும் என்பதால் இப்போது பகலவன் ஸ்கி‌ரிப்டை முடிக்கும் பணியில் சீமான் ஈடுபட்டிருக்கிறார். 

தமி‌ழீழ தேசிய‌த் தலைவர் பிரபாகரனிடம் சீமான் கூறிய இரண்டு கதைகளில் ஒன்று இந்த பகலவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை திறப்பு விழா: ரஜினி, கமல் வரவில்லை - அஜீத், விஜய் பிரசன்ட்!

சென்னை: சென்னையில் தமிழக அரசின் புதிய சட்டப்பேரவை வளாகம் மற்றும் தலைமைச் செயலக கட்டடம் திறப்பு விழா, மிகவும் கோலாகலமாகவும் கண்ணியமான முறையிலும் நடந்தது.

தமிழக புதிய சட்டசபை - தலைமை செயலக கட்டிடம், சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.

முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில், சட்டமன்றம், தலைமை செயலகம் என இரு பிரிவுகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதில், சட்டமன்ற வளாகம் பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு உள்ளது.

ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக கட்டிட வளாக திறப்பு விழா, சட்டமன்ற வளாகம் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

பிரமாண்ட பந்தல்

திறப்பு விழாவையொட்டி, 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.

கருணாநிதி நேரில் போய் வரவேற்பு

இந்த விழாவின் ஒவ்வொரு அசைவையும் முதல்வர் கருணாநிதியே தீர்மானித்தார். அதிகாலை 5 மணிக்கே திறப்பு விழா அரங்குக்கு வந்தவர் ஒவ்வொரு விஷயத்தையும் அருகிலிருந்து சொல்லிச் சொல்லி செய்ய வைத்தார்.

பிற்பகலில் மன்மோகன் சிங்கும் சோனியாவும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களை தானே முன்னின்று வரவேற்றார் முதல்வர். பூங்கொத்து அளித்து சால்வை போர்த்தி மரியாதையும் செய்தார்.

காங்கிரஸ் தலைவரை வரவேற்ற பாஜக முதல்வர்

விமான நிலையத்தில் சோனியா காந்தி வந்ததும் அவரை முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் ரோஸய்யா ஆகியோருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வரவேற்றது வித்தியாசமாகவும் அரசியல் பண்புக்கு இலக்கணமாகவும் அமைந்தது.

எடியூரப்பா பாஜக ஆளும் மாநில முதல்வர், எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை வரவேற்க ஆர்வத்தோடு முன்வந்தார். சோனியாவும் மகிழ்வுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தார்.

தமிழகமும் ஆந்திரமும் இணைந்தே இருந்தன! - ரோஸய்யா

விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ரோஸய்யாவுடன் இந்த விழா குறித்து கேள்வி கேட்டனர் நிருபர்கள். அதற்கு அவர், "நாங்கள் அண்ணன் தம்பிகள். இதற்கு முன் மெட்ராஸ் மாகாணமாக தமிழகமும் ஆந்திரமும் இணைந்தே இருந்தன. இப்போது எல்லைகள் பிரிந்திருந்தாலும் இணக்கமாக இணைந்தே செயல்படுகின்றன. இது தொடரும்" என்றார்

வீல்சேருக்கு விடை கொடுத்தார்

நேற்றைய விழாவில் இன்னொரு சிறப்பு, முதல்வர் வீல்சேர் இல்லாமலே திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுதான். மன்மோகன் சிங் ரிப்பன் வெட்டிய போதும் சரி, பின்னர் அவர்களை பேட்டரி காரில் அழைத்துச் சென்ற போதும் சரி, தனது வயது மற்றும் உடல்நிலையை மீறிய உற்சாகத்துடன் அவர் காணப்பட்டார்.

விழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் குறித்த அறிவிப்பு ஒலித்த போது, தன்னிச்சையாக அவர் எழுந்து நிற்க முயன்றது, பார்வையாளர்களையும் சோனியாவையும் கண்கலங்க வைப்பதாக இருந்தது.

மேடையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி பொன்னாடை அணிவித்தார். மன்மோகன்சிங், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பொன்னாடையை பெற்றுக்கொண்டார். கருணாநிதிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பொன்னாடை அணிவித்தார்.

ரஜினி - கமல் [^] ஆப்ஸென்ட்!

இந்த விழாவில் கட்டாயம் எதிர்பார்க்கப்பட்ட கலைத்துறை பிரமுகர்கள்ரஜினி [^]யும் கமலும் கடைசி வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீப கால விழா சர்ச்சைகள் காரணமாக இருவரும் இந்த விழாவை தவிர்த்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டது.

ஆனால் இளம் நடிகர்களில் அஜீத்தும் விஜய்யும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். நடிகர்கள் பெரும்பாலும் ஆஜராகிவிட்டிருந்தனர். சினிமாக்காரர்களுக்கென்று தனி பகுதியே ஒதுக்கியிருந்தார் முதல்வர்.

ரூ 24 கோடியில் பெரும் பாதுகாப்பு .. போக்குவரத்து ஸ்தம்பிப்பு

இந்த விழாவுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணா சாலை முழுக்க 5000 போலீசார் குவிக்கப்பட்டனர்.

பிரதமர் அண்ணாசாலையில் வரும்போது மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசார் முன்கூட்டியே போக்குவரத்து நிறுத்தம் பற்றி அறிவிப்பு வெளியிட்டனர்.

அண்ணாசாலையே பலத்த பாதுகாப்பு அரணோடு காணப்பட்டது. ஒவ்வொரு சிக்னல் சந்திப்பிலும் 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணாசாலையில் வழிநெடுக உள்ள அனைத்து உயரமான கட்டிடங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சி நடந்த சட்டசபை வளாகத்தை சுற்றிலும் 2,500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள கடைகளும் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டிருந்தன.

புதிய சட்டசபை வளாகத்தின் எதிரில் உள்ள பறக்கும் ரெயில் தண்டவாள பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி நடக்கும்போது பறக்கும் ரெயிலும் நிறுத்தப்பட்டது.

முக்கிய சாலைகளில் இதனால் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் அண்ணா சாலையின் ஒரு பக்கம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.




சனி, 13 மார்ச், 2010

'3 இடியட்ஸ்' - படத்தில் விக்ரம், அஜீத், விஜய் நடிக்க வேண்டும்!

இந்தியில் ஆமிர்கான், மாதவன் நடிப்பில் ஹிட்டான படம் ‘3 இடியட்ஸ்’. இதன் ரீமேக் உரிமை வாங்க பலத்த போட்டி நிலவி வந்த நிலையில். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்கியூட் ‘3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கியுள்ளது. ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்கபோவதாக செய்திகள் அடிப்பட்டு வருகின்றன. முன்னதாக ‘3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல். கோலிவுட்டில் பரவி வந்தன.

இந்நிலையில் ‘3 இடியட்ஸ்’(இந்தி) படத்தில் நடித்த மாதவன் ‘3 இடியட்ஸ்’ தமிழ் ரீமேக்கில் விஜய், அஜீத் மற்றும் விக்ரம் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார். நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு வந்த மாதவன், ‘3 இடியட்ஸ்’ தமிழில் ரீமேக் ஆவது சந்தோஷமாக உள்ளது என்றும் விக்ரம், அஜீத் மற்றும் விஜய் நடித்தால் கண்டிப்பாக பாலிவுட்டை விட கோலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் மாதவன் கூறினார்.


வியாழன், 11 மார்ச், 2010

மார்ச் 19! இசை வெளியிடு !

விஜய்,தமன்னா நடித்து ஏப்ரில் வெளியாக இருக்கும் சுறா திரைபடத்தின் பாடல்கள் மார்ச் 19 வெளியாகிறது.

செவ்வாய், 9 மார்ச், 2010

ஷூட்டிங் பந்தயம்


ஏவி.எம். ஸ்டுடியோ நட்சத்திர பட்டாளங்களால் நிரம்பி வழிந்து‌க் கொண்டிருக்கிறது. காரணம் இரண்டு நாயகன்களின் படங்களும் அடுத்தடுத்த ஃப்ளோர்களில் படப்பிடிப்பு நடப்பதால்தான். 

ஒருபுறம் தனுஷ் நடிக்கும் மாப்பிள்ளை படம். மற்றொன்றில் விஜய் நடிக்கும் சுறா.இரண்டு படங்களும் மே மாதம் வர இருப்பதால் வேகமாக நடந்து வருகின்றன. 

மாப்பிள்ளைப் படத்துக்காக பிரமாண்ட சண்டைக் காட்சிகளுக்காக, ஸ்டண்ட் நடிகர்களும், சுறாவுக்காக பாடல் காட்சி ஒன்றுக்காக நடன நடிகர்கள் என எங்கு பார்த்தாலும் ஜே..ஜே.. என்று கூட்டமாக உள்ளது. 

படம் வெளியாகி ஓடுவதில்தான் போட்டி வரும் என்றால் இங்கே யார் படத்தை சீக்கிரம் முடிப்பது என்று ஒரு மெளனமான போட்டியும் ஏற்பட்டிருக்கிறது.

திங்கள், 8 மார்ச், 2010

விஜயின் கோபம்


விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் தாணு. சீமான்தான் இப்படத்தின் இயக்குனர். படத்தின் பெயர் கோபம்.  கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் கதையை இழைத்து இழைத்து செதுக்கிக் கொண்டிருக்கிறார் சீமான். தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் டீமையும் தான் நடிக்கும் அவுட்டோர் படப்பிடிப்புக்கு அழைத்துப் போய் ஓய்வு நேரத்தில் அவர்களுடன் அமர்ந்து கதையை மெருகேற்றி வருகிறார்.

வழக்கத்திற்கு மாறாக இப்போது வெனின்சுலாவுக்கே போய்விட்டார் சீமான். அட, இதென்ன ஹைடெக் கதையா இருக்கு என்று ஆச்சர்யப்படுகிறவர்களுக்கு...

வேறொரு முக்கிய நிகழ்ச்சிக்காக இந்த நாட்டுக்கு போயிருந்தாராம். அப்படியே இன்னும் ஒருவாரம் தங்கியிருந்து வசனங்களை எழுதிவிட்டு திரும்பலாம் என்று முடிவெடுத்தாராம். திரும்பி வரும்போது 'கோபம்' கோபமாக வருவார் போலிருக்கிறது.
(இப் படத்துக்கு கோபம் என்று பெயர் தேர்வு செய்தது.தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்!)

சனி, 6 மார்ச், 2010

Best Actress in 2009

Best Actor in 2009

best songs in 2009

Who is your favorite Dancer in Tamil cinema History?

Who is your favorite actor?

How is this Website?

What is your favorite Movie

Vote for your favorite Movie in 2008

Best Music Director in 2009

Poll

Vijay's Best OnScreen Pair
Thrisha
Asin
Shriya
Nayanthara
Genelia
  
pollcode.com free polls

Poll

vote for your favorite song
Puli urumuthu-Vettaikaran
Unal unal-ATM
Moza Molanu-Kuruvi
Dole Dole-Pokkiri
Va va en thalaiva-Sachien
  
pollcode.com free polls